போட்டிக்கு கொடுத்த பணத்தை வைத்து சரவணன் செய்த வேலையால் சந்தியா அதிர்ச்சி அடைந்தார்.

Raja Rani 2 Episode Update 05.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சந்தியாவும் சரவணனும் போட்டிக்காக சென்னை சென்று உள்ளனர். சென்னை சென்ற இவர்கள் போட்டி நடக்கும் ஹோட்டலுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டனர்.

இவர்களை கலக்கப்போவது யாரு சரத் தான் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். ஹோட்டலுக்குச் சென்ற இருவரும் அந்த இடத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். சந்தியா சரவணனுக்கு வெற்றி பெற நம்பிக்கை கொடுக்கிறார். பிறகு போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல போட்டியாளர்கள் அந்தந்த இடங்களில் நிற்க சொல்கின்றனர்.

சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

கையில் இருக்கும் அனைத்து பொருட்களையும் கூட வந்த அவரிடம் கொடுத்துவிட்டு மேடையின் மீது வைத்துள்ள கவரை பிரித்துப் பார்க்க சொல்கின்றனர். கவருக்குள் ஆயிரம் ரூபாய் பணம் இருக்கிறது. அதனைக் கொண்டு கீழே இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து சமையல் செய்ய வேண்டும் என கூறுகின்றனர். பொருட்களை சிக்கனமாக பயன்படுத்தி அதிக அளவிலான டிஸ்ஸை செய்ய வேண்டும் என்பதுதான் விதிமுறை.

போட்டியாளர்கள் அனைவரும் கீழே சென்று சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒருவர் வந்து தன்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை மருந்து வாங்கப் பணம் வேண்டும் உதவி செய்யுங்கள் என அனைவரிடமும் கேட்கிறார். யாரும் உதவ முன்வராத நிலையில் சரவணனிடம் சென்று கேட்டபோது சரவணன் கையிலிருக்கும் ஆயிரம் ரூபாயிலிருந்து 500 ரூபாயைக் கொடுத்து விடுகிறார்.

மீதமுள்ள 500 ரூபாய் குறைந்து பொருட்களை வாங்கி மேலே வருகிறார். போட்டியாளர்கள் அனைவரும் அதிகமான பொருட்களை வாங்கி வந்து இருப்பதை பார்த்த சந்தியா சரவணனும் நிறைய பொருட்களை வாங்கி வந்து இருப்பார் என எதிர்பார்க்க அதற்கு மாறாக சரவணன் குறைந்த பொருட்களை வாங்கி வந்திருப்பதால் அதிர்ச்சி அடைகிறார். அதனை வைத்து இரண்டே டிஸ்ஸை மட்டுமே செய்கிறார்.

Enemy படம் எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..! | Public Review

போட்டியாளர்கள் சமைத்த உணவுப் பொருட்களை சுவைத்த நடுவர்கள் சரவணன் டேபிளுக்கு வரும்போது என் குறைந்த பொருட்களை வாங்கி வந்தீர்கள் என கேட்கின்றனர். ஒருவர் அம்மாவின் மருத்துவச் செலவுக்கு பணம் வேண்டும் எனக் கேட்டார் அதில் அவருக்கு 500 ரூபாய் கொடுத்து விட்டேன் என சரவணன் கூறுகிறார். இங்கு நல்ல சமையலுக்கு தான் பரிசு நல்ல மனசுக்கு இல்லை என நடுவர்கள் கூறுகின்றனர். பிறகு சரவணன் சமைத்ததை டேஸ்ட் செய்து நன்றாக இருப்பதாக சொல்கின்றனர்.

நடப்பதையெல்லாம் பார்த்த சந்தியாவுக்கு 15 பேரில் ஒருவராக தேர்வு ஆவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.