நடிப்பு வராத அஜித்துக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் ஏன் என பேசி உள்ளார் பிரபல தயாரிப்பாளர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளன. இப்படியான நிலையில் அஜித் குறித்து தயாரிப்பாளர் வெடிமுத்து பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் என்னை தாலாட்ட வருவாளா படத்தில் அஜித்தை விதவிதமாக நடிக்க சொன்னேன் ஆனால் அவர் அப்படி நடிக்கவில்லை. அதன் பிறகு நான் தான் அவருக்கு எப்படி நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தேன்.
இப்படி நடிப்பே வராத அஜித்துக்கு இன்னைக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள் என பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் வெடிமுத்துவை விமர்சனம் செய்து வருகின்றனர்.