தேசிய விருது பெற்ற நடிகை ஒருவர் தலைவி படத்தில் சசிகலாவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வரான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலர் படமாக்க ஆசைப்பட்டு தற்போது பிரியதர்ஷினி, ஏ.எல் விஜய் மற்றும் கெளதம் மேனன் என மூன்று பேர் படமாக்கி வருகின்றனர்.
தலைவி என்ற பெயரில் ஏ.எல் விஜய் இயக்கும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார், இவரை தொடர்ந்து சசிகலாவாக நடிக்க பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற ப்ரியாமணி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
திருமணத்திற்கு பின்னர் படங்களில் தலை காட்டாமல் இருந்து வந்த ப்ரியாமணி சசிகலாவாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.
சசிகலா கதாபாத்திரம் அவருக்கு செட்டாகுமா? ஆகாதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.