பத்து தலை படத்துக்காக பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து பத்து தலை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்க ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
நடிகர் சிம்பு வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்த பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
தற்போது அதிகமான படங்கள் நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர் ஒரு படத்துக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் இது மூன்று வருடத்திற்கு முன்னதாகவே கம்மி ஆன திரைப்படம் என்பதால் இந்த படத்திற்காக வெறும் 70 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.