பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதிய படத்தை இயக்கப் போகும் பிரதீப் ரங்கநாதன்..!
பிரதீப் ரங்கநாதன் இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து LIK, டியூட் என தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்து வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது அவர் இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஹீரோ கதைக்களத்துடன் அந்த படம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
