பிரபல தமிழ் கவிஞர் பிறைசூடன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
Poet Pirai Soodan Passes Away : தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான சிறை என்ற படத்தில் இடம்பெற்ற ராசாத்தி ரோசா பூவே என்ற பாடலை எழுதி அறிமுகமானார்.
நவராத்திரி : வீட்டுக்குள் நிகழும் ஒரு கொலு திருவிழா
அதன் பின்னர் இரண்டில் ஒன்று, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என பயணத்தை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயிக்கிற குதிரை என்ற படத்தில் இடம்பெற்ற வீட்டுக்கு ஒரு சாவி உண்டு என்ற பாடலை எழுதியிருந்தார். ஆட்டமா தேரோட்டமா, நடந்தால் இரண்டடி, சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் என இதுவரை 2000க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை எழுதியுள்ளார். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை எழுதியுள்ளார்.
நிறைய கஷ்டங்களை பார்த்துட்டோம் ! – Actor Atharvaa speech | Thalli Pogathey
மேலும் இவர் கோபுரம், ஆனந்தம், ரேகா ஐஏஎஸ், உள்ளிட்ட பல்வேறு சீரியல்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். மேலும் சத்திரிய தர்மம், குரோதம் 2, ஷங்கர், ஸ்ரீராம ராஜ்ஜியம், சதுரங்க வேட்டை, புகழ் உள்ளிட்ட படங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார்.
தற்போது 65 வயதாகும் இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக இன்று மாலை 4.30 மணிக்கு உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.