சிவகார்த்திகேயன் நடித்து வரும் தான் படக்குழுவினருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Penalty for Sivakarthikeyan in Don Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தை தொடங்கி சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.

நடிகர் சூரி, பிரியங்கா மோகன், யோகி பாபு, பாலசரவணன் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் ஆனைமலை பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரத்தில் நடைபெற்றுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள போது உரிய அனுமதி இல்லாமல் படக்குழு படப்பிடிப்பை நடத்தி உள்ளது.

நாளை என்று, ஒன்று கிடையாது. இன்று நிஜம் : ஓஷோ

இதனால் அரசு அதிகாரிகள் டான் படக்குழுவினருக்கு 19,400 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

திடீரென இந்திய அளவில் Trend ஆன Shivani Narayanan! – என்ன காரணம் தெரியுமா? | Latest Cinema News