பரம்பொருள் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் சரத்குமார், அமிதாஷ் பிரதான் உட்பட பலர் நடிப்பில் சிலை கடத்தலை மையமாக கொண்டு வெளியாகியுள்ள திரைப்படம் தான் பரம்பொருள்.
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் யுவன் இசையில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
போர் தொழில் படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்த சரத்குமார் மைத்ரேயன் என்ற கதாபாத்திரத்தில் பேராசை மிக்கவராக நடித்துள்ளார். இதனால் இவர் மனைவி கூட பிரிந்து செல்ல தனியாக நிற்கும் சரத்குமார் சிலை கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறார்.
ஆதி என்பவரும் சிலை கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இருவரும் சந்தித்துக் கொள்ள பிறகு இரண்டு பேரும் ஒன்றிணைந்து ஒரு புத்தர் சிலையை விற்க முயற்சி செய்கின்றனர். மிகவும் சவாலான விஷயமாக இருக்கும் இந்த சிலையை திட்டமிட்டபடி விற்றார்களா? அதில் ஒளிந்து இருக்கும் உண்மைகள் தெரிய வந்தததா? அடுத்ததாக நடந்தது என்ன என விறுவிறுப்பான கதையை கொண்ட படம் தான் இந்த பரம்பொருள்.
படத்தை பற்றிய அலசல் :
சரத் குமார், அமிதாஷ் உட்பட படத்தில் நடித்துள்ள அனைவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம்.
அரவிந்த் ராஜ் சிலை கடத்தலை பற்றி மேலோட்டமாக கொண்டு போகாமல் அதில் உள்ள நுணுக்கமான விஷயங்களையும் அலசி படத்தை தனித்து நிற்க வைத்துள்ளார்.
மொத்தத்தில் பரம்பொருள் – பர்ஃபெக்ட்