கண்ணன் ஐஸ்வர்யாவை தங்கவைக்க என்ன செய்வது என தனம் பேச மீனா செய்த வேலையால் ஜீவாவுக்கு சந்தேகம் வந்துள்ளது.
Pandian Stores Episode Update 17.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஐஸ்வர்யா அனைவருக்கும் கச்சிதமாக சமைத்ததை பாராட்ட மீனா ரொம்ப பாராட்டாதீங்க என பொறாமை கொள்கிறார்.
பிறகு கிச்சனில் ஐஸ்வர்யாவை பாராட்டிப் பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த மீனா சாப்பாடு செய்யலாம் ஒரு விஷயமா என சொல்ல முல்லை அன்னைக்கு நீங்க குழைச்சு செஞ்சீங்களே அப்படியா என கிண்டலடிக்கிறார். அவள பாராட்டுவதா இருந்தா அவ கிட்ட சொல்லுங்க, என்கிட்ட ஏன் சொல்றீங்க என மீனா கூறுகிறார். பிறகு அவன் சாதாரண ஆள் இல்ல. போகப்போக உங்களுக்கே தெரியும் என கூறுகிறார்.
பின்னர் தனம் அதெல்லாம் சரி கண்ணன் ஐஸ்வர்யாவை எங்கே தூங்க வைக்கிறது என பேச்சை தொடங்க மீனா அவங்க நைட் ஆனா எதிர் வீட்ல படுத்து கட்டும் என கூறுகிறார். தனம் அதெல்லாம் சரியா வராது என கூறுகிறார். இவ்ளோ பெரிய ஹால் இருக்கே அங்க தூங்கிக்கட்டும் என மீனா சொல்ல புதுசா கல்யாணம் ஆனவங்க அவங்கள போய் எப்படி அங்க தூங்க வைக்கிறது, ஏதாச்சு பண்ணனுமே சரி யோசிக்கலாம் என கூறுகிறார் தனம்.
பிறகு முல்லை நான் வேணா எங்க ரூமை தரட்டுமா என கேட்க அதெல்லாம் வேண்டாம் என தனம் சொல்லிவிடுகிறார். ஐயோ எங்க நம்ப ரூமை கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் கயல் கத்துறா என சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார் மீனா.
ஜீவா லைட்டைப் போட்டு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க கயலை தூங்க வைக்க படாதபாடு படுகிறார். உனக்கு தூக்கம் வந்தா போய் தூங்கு கயல் பாப்பாவுக்கு குடு நான் வெளியே கூட்டிகிட்டு விளையாடிட்டு இருக்கேன் என சொல்ல வெளியே எல்லாம் போகவே கூடாது என சொல்லி விடுகிறார். இவளுக்கு என்ன ஆச்சி என ஜீவா யோசித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த பக்கம் முல்லை தனம் குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த கதிர் பாப்பாவை வாங்கி கொஞ்சுகிறார். பாப்பாவை தூங்க பயமாக இருக்கிறது என கதிர் சொல்ல பழகிக்கொண்ட நாளைக்கு நமக்கு குழந்தை பிறந்தால் தூக்கணும்ல என கூறுகிறார். அதெல்லாம் நான் தூங்க மாட்டேன் என கதிர் சொல்ல மாமாவை பாருங்க எந்த நேரமும் குழந்தையை அவர்தான் வச்சுட்டு இருக்காரு. நீங்களும் அப்படித் தானே இருக்கணும் என கூறுகிறார்.
இந்த பக்கம் மீனா உள்ளே அமர்ந்து கொண்டு யாரையும் வெளியே விடாமல் இருக்க தனம் கதவை தட்டுகிறார். உடனே பதறிப்போன மீனா வேணா வேணா திறக்காத என கூற ஜீவா அதை மீறி திறக்கிறார். உள்ளே வந்த தனம் குழந்தைக்கு பசும்பால் காய்த்து வச்சிருக்கேன் எடுத்துட்டு வரலையா? அவ நடுராத்திரில பசிக்கு அழுதா என்ன பண்ணுவ? என பாலை கொடுக்கிறார்.இதுக்குதான் கூப்பிட்டாங்களா நான் கூட என்னவோனு நினைச்சுட்டேன். என மீனா மனதுக்குள் பேசிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் முடிவடைகிறது.