மேஸ்திரி பணத்தைக் கேட்க பிரச்சனையில் சிக்கியுள்ளார் கதிர்.
Pandian Stores Episode Update 12.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணன் வெளியில் அமர்ந்து என்ன செய்வது என தெரியாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அவருக்கு ஐஸ்வர்யா ஆறுதல் கூறி உள்ளே அழைத்துச் செல்கிறார். இப்படியே உட்கார்ந்துட்டு பிரச்சனையை நெனச்சிட்டு இருந்தா ஒரு ராத்திரியில எல்லாம் சரியாகி விடாது. போயிட்டு தூங்குவோம் நாளைக்கு காலையில ஒரு வழி பிறக்கும் என சொல்கிறார்.
இந்திய ஹாக்கி அணிக்கு, தலைமை தாங்குகிறார் 21 வயது இளைஞர்
இந்த பக்கம் வீட்டில் மூர்த்தி, தனம், மீனா மற்றும் முல்லை ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் கண்ணன் ஏன் கடைக்குப் போகாமல் இருக்கும் என கேட்க நீ உன் எனக்கு தெரியவில்லை ஒருவேளை லீவா இருக்கும். இல்லனா அதிகமா போவாங்க என கூறுகிறார். அக்கம்பக்கத்து கதை நமக்கெதுக்கு என மூர்த்தி சொல்ல முல்லையும் அதையே கூறுகிறார்.
பிறகு மூர்த்தி கடைக்கு கிளம்பியதும் மீனாவிடம் தனம் இது குறித்து கேட்க அப்பா எதுவும் சொல்லலையே அக்கா என கூறுகிறார். முல்லை கண்ணனை நினைத்து எல்லாம் கவலைப்படுறீங்க ஆனால் பிரச்சனை இவருக்குத்தான் என கூறுகிறார். முல்லை நீ எதாச்சு சொன்னியா என தனம் கேட்க நான் எதுவும் சொல்லல என கூறி விடுகிறார். நீங்க எதுக்கு கடுப்பாகறீங்க என மீனா கேட்க எனக்கு இப்போ எல்லாத்துக்கும் கடுப்பாகுது டாக்டரை தான் பார்க்கணும் என கூறுகிறார்.
இந்த பக்கம் மூர்த்தி கடையில் வேலை செய்து கொண்டிருக்க அப்போது மேஸ்திரி பணம் கேட்கிறார். ஒரு வாரம் டைம் கொடுங்க நான் பணத்தைக் கொடுத்து விடுகிறேன் என கதிர் சொல்கிறார். மேஸ்திரி வேலையாட்களுக்கு சம்பளம் போடணும் என கூறுகிறார் கொஞ்சம் எனக்காக பேசிப் பாருங்க என கதிர் சொல்ல முல்லை எப்படி சமாளிக்கப் போறீங்க உங்களை நினைச்சா எனக்கு கஷ்டமா இருக்கு என கூறுகிறார். பிறகு பார்த்துக்கலாம் என முல்லையை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் கதிர்.
LIVE: விடாமல் அடித்து நொறுக்கிய கனமழை – வெள்ளத்தில் மிதக்கும் Chennai..!
இந்தப்பக்கம் மீனாவின் அப்பா குழந்தைக்கு ஜாதகம் எழுத போன இடத்தில் கயல் பிறந்தநாளன்று அப்பா அம்மாவோடு திருவிடந்தை கோயிலுக்கு போயிட்டு வரணும் என சொன்னாங்க என கூறுகிறார். மூர்த்தியும் தனமும் போயிட்டு வரட்டும் என கூறுகிறார்கள். எனக்கு வேலை இருக்கு அவங்க அம்மாவுக்கு அவ்வளவு தூரம் காரில் உட்கார்ந்து போக முடியாது என மீனாவின் அப்பா சொல்ல அவங்க ரெண்டு பேர் மட்டும் போயிட்டு கோவிலில் தரிசனம் செஞ்சுட்டு சென்னையை சுற்றி பார்த்துவிட்டு வரட்டும் என கூறுகிறார் தனம். போகிறது, தங்குறதுக்கு சாப்பிடுவதற்கும் நான் ஏற்பாடு செய்துவிடுகிறேன் என மீனாவின் அப்பா சொல்கிறார். மீனாவுக்கு ஜீவாவுடன் வெளியே போக இருப்பது ஒரே குஷி. இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.