கண்ணன் மீது திருட்டு பழி கட்டப்பட்டு கடையை விட்டு துரத்தி உள்ளார் ஜனார்த்தனன்.

Pandian Stores Episode Update 10.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வீட்டில் தனம் மற்றும் மூர்த்தி ஆகியோர் கயல் பாப்பாவை வைத்து கொஞ்சி கொண்டு இருக்கின்றனர். தனம் மூர்த்தியிடம் ஏன் மாமா இப்பலாம் பாதிநேரம் வீட்டிலேயே இருக்கீங்க கடைக்குப் போகிறதே இல்லை என கேட்கிறார். பையனை பார்த்துகிட்டே இருக்கணும் கொஞ்சி கிட்டே இருக்கணும் போல இருக்கு. அவனும் கயலும் மாறி மாறி ஞாபகத்துக்கு வந்துகிட்டே இருக்காங்க சொல்லிவிட்டு கடைக்கு கிளம்புகிறார்.

இந்த நேரத்தில் சாந்தி என்பவர் வீட்டிற்கு தனம் என அழைத்துக் கொண்டு வருகிறார். பிறகு தனம் மூர்த்தியிடம் அவர் போஸ்ட் ஆபீஸில் இருந்து வருகிறார் கயலுக்கு பிறந்த நாள் வருவதால் அவர் பெயரில் மாசம் ஐந்தாயிரம் கட்டுவது போல ஒரு ஆர்டி கணக்கை தொடங்க தான் வர சொன்னேன். மாசம் ஐந்தாயிரம் கட்ட வேண்டும் 5 வருடத்தில் இந்தப் பணத்தோடு சேர்த்து 60 ஆயிரம் கிடைக்கும் என சொல்கிறார். பிறகு கயல் பெயரில் ஒரு ஆர் டி கணக்கு உருவாக்கப்படுகிறது. மேலும் பிறந்த நாளுக்கு ஒரு லட்சம் போடனும்னு பேசிக்கிட்டோமே என முர்த்தி சொல்ல அதுவும் தான் செய்யணும் என கூறுகிறார் தனம்.

தசைகள் பலம் பெற, நல்லதோர் ஆசனம்..

போஸ்ட் ஆபீஸில் இருந்து வந்தவர் பையன் பேர்லயும் ஒரு ஆர்டி கணக்கை தொடங்கலாமே என சொல்ல அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம். அவன் ஆம்பள பையன் தானே பொறுமையா பார்த்துக்கலாம் என கூறுகின்றனர். பிறகு இந்த பெண்மணி கிளம்ப மீனா வந்து யாரது என கேட்கிறார். தனம் அவர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்த நேரத்தில் மூர்த்தி கடைக்கு கிளம்புகிறேன் என கடைக்கு கிளம்பிவிட பின்னர் தனத்தின் குழந்தை அழுகிறது. உடனே அவரும் உள்ளே சென்று விடுகிறார்.

மீனா வழக்கம்போல் பணம் விஷயமாச்சே நம்மகிட்ட ஏதாவது சொல்லுவாங்களா.? பையன் பேர்ல போஸ்ட் ஆபீஸ்ல பெரிய அமௌன்ட் டெபாசிட் பண்ணுவாங்க என நினைத்துக் கொள்கிறார். இந்த பக்கம் கதிர் கடை கட்டும் இடத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு செல்ல இப்போதைக்கு பணம் வேண்டாம் நான் வெளியே போகிறேன் சாயங்காலம் வாங்கிக் கொள்கிறேன் என மேஸ்திரி கூறி விடுகிறார்.

Annaatthe கலவையான விமர்சனம்..குவியும் Box-Office வசூல் – இத்தனை கோடியா?

கடையில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இருக்க ஜனார்த்தனன் 75 ஆயிரம் பணம் கொடுத்து 15,000 தனியாகவும் மீதி இருக்கும் 60000-ஐ ஆறு 10,000 ஆக பிரித்து கட்டு போட்டு வைக்குமாறு ஐஸ்வர்யாவிடம் கூறிவிட்டு செல்கிறார். ஐஸ்வர்யாவும் அதேபோல் பணத்தை பிரித்து கல்லாவில் வைத்து பூட்டி சாவியை அதில் மறந்து வைத்து விடுகிறார். இதனை நோட்டமிட்ட கடையில் வேலை செய்யும் நபர் ஒருவர் ஐஸ்வர்யா உள்ளே சென்றதும் கல்லாவை திறந்து 15,000 கட்டை மட்டும் எடுத்து விடுகிறார்.

பணத்தை எடுத்தவர் டெலிவரி கொடுக்க செல்வதாக வெளியே சென்றுவிடுகிறார். கண்ணனும் டெலிவரி கொடுக்க வெளியே செல்கிறார். பின்னர் வெளியே சென்றவர்கள் மீண்டும் கடைக்கு வந்து விடுகின்றனர். ஜனார்த்தனன் பிரித்து வைத்த பணத்தை கேட்கிறார். ஐஸ்வர்யாவும் எடுத்துக் கொடுக்க அதில் 15 ஆயிரம் கட்டு இல்லை என கேட்கிறார். ஐஸ்வர்யா கல்லாவில் தேடிவிட்டு பணத்தை இங்கேதான் வைத்தேன் ஆனால் காணவில்லை என கூறுகிறார்.

உடனே ஜனார்த்தனன் கண்ணனை அழைத்து நீ பணத்தை எடுத்தியா எனக் கேட்கிறார். கண்ணன் இல்லை என்று சொன்னாலும் நம்பவில்லை டெலிவரி கொடுக்க போனயே வீட்டில் வச்சிட்டு வந்துட்டியா என கேட்கிறார். பிறகு கண்ணனின் சட்டை பேண்ட் பாக்கெட்டுகளில் சோதனை செய்கிறார். ஐஸ்வர்யா பணம் எடுக்கல என எவ்வளவு கூறியும் ஜனார்த்தனன் நம்பவில்லை. வீட்டிலேயே பணத்தை திருடுனவன் தானே நீ, என கண்ணனை திட்டுகிறார். இன்னைக்கு ராத்திரிக்குள்ள 15 ஆயிரம் பணம் வந்தாகணும். இல்லன்னா உங்க வீட்டுல வந்து நின்னு நியாயம் கேட்பேன் என ஜனார்த்தனன் கூறுகிறார். மேலும் இருவரையும் கடையை விட்டு வெளியே போகச் சொல்கிறார். போகும்போது இருவரின் காலேஜ் பேக்கை சோதனை செய்து அனுப்பி வைக்கிறார்.

இருவரும் வீட்டுக்கு போகும் வழியில் நின்று என்ன செய்வது என யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். ஐஸ்வர்யா போலீசில் கம்ப்ளைண்ட் கொடுத்துவிடலாம் அவங்க கண்டுபிடிப்பாங்க என கூறுகிறார். கண்ணன் அதெல்லாம் வேண்டாம் அவர் நம்ப சொந்தக்காரர் என சொல்ல அவர் நம்மள அப்படி பாக்கலையே என கூறுகிறார் ஐஸ்வர்யா. இருவரும் அங்கே நின்று கொண்டிருப்பதை பார்த்த கதிர் ஏன் இங்க இருக்காங்க என யோசித்து விட்டு கிளம்பி விடுகிறார். மீண்டும் திரும்பி வந்து கண்ணன் ஐஸ்வர்யாவிடம் என்ன ஏது என விசாரிக்க ஐஸ்வர்யா நடந்ததை கூறுகிறார்.

உடனே கதிர் கண்ணனை வா சூப்பர் மார்க்கெட்டுக்கு போகலாம் என அழைக்கிறார். கண்ணன் அதெல்லாம் வேண்டாம்ணே நாங்க பார்த்துக்கிறோம், என்னால திரும்பவும் வீட்டுல யாருக்கும் பிரச்சனை வேண்டாம் என கூறுகிறார். மீண்டும் மீண்டும் கதிர் அழைத்தும் கண்ணன் வர மறுக்கிறான். என்னால வீட்டுல நிறைய பிரச்சனை திரும்பவும் பிரச்சனை வேண்டாம் என கூறுகிறார். கதிர் பைக்கில் சென்று அமர்ந்து மீண்டும் இவர்களை பார்க்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.