Pandian Stores Episode Update 09.11.21

மூர்த்தி சொன்ன வார்த்தைக்கு மீனா பதிலடி கொடுக்க, தனம் மீனாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Pandian Stores Episode Update 09.11.21 : ரூமிற்குள் வந்த முல்லை கதிரிடம் பங்ஷன் சின்னதா நடந்துச்சுனு தான் பேரு ஆனால் சரியான வேலைங்க என கூறுகிறார். பிறகு கதிர் முல்லையை படுத்து ஓய்வெடுக்க சொல்கிறார். எப்படியும் வீட்டுக்குள்ளவே 7 கிலோ மீட்டர் நடந்திருப்ப என கதிர் கூறுகிறார். முல்லைக்கு கால் அமுக்கி விடுகிறார் கதிர்.

பிறகு கதிர் மீனா குறித்து கேட்க முல்லை அவங்க சரியாகிட்டாங்க என கூறுகிறார். அம்மா வீட்டுக்கு போய்ட்டு அடுத்து வீட்டுக்கு வர போறது உன் விசேஷமா தான் இருக்கனும்னு சொன்னாங்க, எல்லாரும் இதையே தான் பேசுங்கான்க என சொல்கிறார். எப்போ நல்ல விசியம் சொல்ல போறோம் என முல்லை கேட்க குழந்தை பெத்துக்கிட்டா உனக்கு வலிக்கும்ல அதான் பயமாக இருக்கு என சொல்கிறார். குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு என முல்லை சொல்ல கதிர் சீக்கிரம் நடக்கும், நீயே உங்க அம்மா கிட்ட சொல்லுவ, உனக்கும் சீமந்தம், குழந்தைக்கு பேர் வைக்குற பங்ஷன் எல்லாமே நடக்கும். குழந்தையை வச்சிக்க முடியலன்னு என்கிட்டயே சலிச்சிப்ப என சொல்கிறார்.

சென்னையை சுற்றி வேகமாக நிரம்பும் ஏரிகள் : வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லை எனக்கு உங்க மாதிரியே ஒரு பையன் வேணும் என முல்லை சொல்ல எப்படி இதே மாதிரி தாடி மீசையுடனேயே வா? நல்லா இருக்காதே என சொல்ல ஓவரா தான் போறீங்க என முல்லை சொல்ல கதிர் நமக்கு ரெண்டு பிள்ளை பிறக்கும் என சொல்ல மீனாவும் அதையே தான் சொல்றாங்க என முல்லை சொல்கிறார். ஒரு வேலை உண்மையாவே அப்படி நடக்குமோ என முல்லை சொல்ல கண்டிப்பா நடக்கும் என கதிர் சொல்கிறார். நினைச்சாலே சந்தோஷமா இருக்கு என முல்லை கூறுகிறார்.

இந்த பக்கம் மீனா போனில் பேசி கொண்டிருக்கும் போது ஜீவா உள்ளே வருகிறார். அம்மாவா என ஜீவா கேட்க மீனா ஆமாம் என சொல்கிறார். இன்னைக்கு அண்ணியோட அம்மா ஓவரா தான் பேசிட்டாங்க என சொல்ல அவங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை, அத்தை இருந்த வரைக்கும் என்னை திட்டிட்டே இருந்தாங்க, இப்போ இவங்க திட்டிகிட்டே இருகாங்க என சொல்கிறார். அந்த அளவுக்கு என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியவே இல்லை, உன்ன லவ் பண்ணி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் தான் கஷ்டப்படுறேன், எங்க அப்பா அம்மாவும் கஷ்டப்படணுமா? கண்ணன் குழந்தையை காட்டுங்கனு பாவமா கேட்டான், அதனால தான் கொண்டு போய் காட்டுனேன் என மீனா சொல்கிறார். நீ பண்ணது பெரிய விசியம், அவங்களுக்கு தெரியாதுல என ஜீவா சொல்ல தெரிஞ்சி இருந்தா இன்னும் நல்லா திட்டி இருப்பாங்க.

உங்க அண்ணி நினைச்சா கண்ணனை இந்த வீட்டுக்குள்ள எப்ப வேணாலும் கூட்டிட்டு வர முடியும், முல்லை நினைச்சா கூட முடியும் ஆனால் நான் நினைச்சா மட்டும் அது முடியவே முடியாது என மீனா சொல்கிறார். அப்படியெல்லாம் இல்ல மீனா, இதுல அண்ணன் தான் முடிவெடுக்கணும், எனக்கு இங்க எந்த உரிமையும் இல்ல. கயலுக்கு பேர் வைக்க கூட உரிமை இல்லை, தொட்டில், நடவண்டினு எல்லாமே பழசு, ஆனால் இன்னைக்கு எல்லாமே புதுசு, தனம் அக்கா வீட்டுல இருந்து கொண்டு வந்து இருந்தாங்க என மீனா சொல்கிறார். இதையெல்லாம் பார்த்தா என்ன நினைப்பாங்க? இங்க எல்லாரும் ஒன்னு இல்ல, பாரபட்சம் பாக்குறாங்க, கயலுக்கு பேர் வைக்குற அப்போ தனம் அக்கா இப்படியெல்லாம் பண்ணி இருந்தா எங்க அப்பா அம்மா இப்படி பேசி இருப்பாங்க, எங்க அப்பா எப்படியுமே நம்ம வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லுவாரு, நான் வர மாட்டேனு சொல்லுவ, இப்போ எங்க வீட்டுக்கு போய்டலாம்னு தோணுது, ஆனால் நீ என்கூட வர மாட்டேன்னு தெரியும். ஏன்னா உனக்கு நான் முக்கியமே இல்லை, உனக்கு என்னை தவிர இந்த வீட்ல எல்லாருமே உனக்கு முக்கியம் என சொல்கிறார். அதெல்லாம் இல்ல, இனிமே இப்படி நடக்காமல் பார்த்துக்கறேன்.

இங்க யாருக்கும் உன் மேல அன்பு இல்லனு சொல்றதெல்லாம் உண்மை இல்ல, எதையும் மனசுல வச்சிக்காத என ஜீவா சமாதானம் செய்கிறார். மறுநாள் காலையில் தனம், மூர்த்தி மீனா பற்றி கேட்கின்றனர். கண்ணன் குழந்தையை பார்க்க ஆசைப்பட்டு இருக்கான், அவன் கிட்ட காட்ட தான் மீனா தூக்கிட்டு போய் இருக்கா என சொல்கிறார். தனம் மீனாவிடம் கண்ணனிடம் காட்ட தான் தூக்கிட்டு போனயா? என கேட்க ஆமாம் அக்கா அதுக்கும் என்ன திட்ட போறீங்களா என மீனா கேட்கிறார். பிறகு தனம் மூர்த்தியிடம் கண்ணன் ரொம்ப பாவம் மாமா என சொல்கிறார். பிறகு எங்க அம்மாவை கூட்டிட்டு போக சொல்லி அண்ணன் கிட்ட சொல்லிட்டேன் என கூறுகிறார்.

Annaatthe கலவையான விமர்சனம்..குவியும் Box-Office வசூல் – இத்தனை கோடியா? | Rajinikanth, Nayanthara

உடனே ஜீவா அண்ணி மெதுவா பேசுங்க, அவங்க காதுல விழ போகுது என சொல்கிறார். மூர்த்தி மீனா அதெல்லாம் புரிஞ்சிக்கும், ஏன்பா மீனா அவங்க பேசுனதெல்லாம் அம்மா பேசுனதா நினைச்சு மறந்துடு என சொல்ல மீனா எங்க அம்மா அப்படியெல்லாம் பேச மாட்டாங்க மாமா என சொல்கிறார். பிறகு தனம் தப்பு தான் மீனா விடு என சொல்கிறார். உடனே மீனா பரவாயில்ல அக்கா என சொல்கிறார்.

கதிர் கன்டராக்டருக்கு பணம் கொடுக்கணும், சிமெண்ட் வாங்கணுமாம் என சொல்ல தனத்தை பணம் எடுத்து வர சொல்கிறார் மூர்த்தி. பிறகு தனம் மீனாவிடம் சொல்ல இதெல்லாம் வழக்கமா முல்லை கிட்ட தானே சொல்லுவீங்க என மீனா சொல்ல நக்கலை பார்த்தீங்களா இவளுக்கு என சொல்கிறார். பிறகு பணத்தை வாங்கி கொண்டு கதிர் கடை கட்டும் இடத்திற்கு கிளம்ப அந்த நேரத்தில் முல்லை என்னங்க கிளம்பிடீங்களா என உள்ளே இருந்து வருகிறார். உடனே ஜீவா முல்லையை கலாய்க்க பிறகு மூர்த்தி ஜீவா கடைக்கு கிளம்புகின்றனர்.

கடையில் கண்ணன் ஐஸ்வர்யா வேலை செய்து கொண்டிருக்க மீனாவின் அப்பா காலாவதியான பொருளையெல்லாம் தனியா எடுத்து வை என சொல்கிறார். ஒருவர் கடைக்கு வந்து கடலை மாவு கேட்க அது கடைசில இருக்கு என கண்ணன் சொல்கிறார். கண்ணனை எடுத்து வந்து கொடுக்குமாறு சொல்ல கண்ணன் மைதா மாவை எடுத்து வந்து கொடுக்கிறார். பிறகு வாடிக்கையாளர் இது மைதா மாவு என சொல்ல ஐஸ்வர்யா கொண்டு வந்து கொடுக்கிறார்.

பிறகு மீனாவின் அப்பா கடலை மாவு எதுனு தெரியாதா? அதான் கொட்ட எழுத்துல இருக்கே என திட்டுகிறார். என்னத்த படிச்சு என்ன வேலை செய்யுற என அந்த மைதா மாவு பேக்கட்டை மேலேயே தூக்கி எறிகிறார். ஐஸ்வர்யாவை வேடிக்கை பார்க்காமல் வேலையை பாரு என சத்தம் போடுகிறார். ஐஸ்வர்யா கண்ணனை போய்ட்டு டி குடிச்சிட்டு வர சொல்ல கண்ணன் டீ குடித்து கொண்டிருப்பதை பார்த்த மீனாவின் அப்பா கண்ணனை வேலை செய்ய துப்பு கிடையாது, நேரத்துக்கு டீ, சாப்பாடு மட்டும் சாப்பிடு என திட்ட ஐஸ்வர்யா இவ்வளவு நேரம் வேலை செய்துட்டு தான் இருந்தாரு, நான் தான் டீ குடிச்சிட்டு வர சொன்னேன் என சொல்கிறார்.

இதுக்கு தான் புருஷன் பொண்டாட்டிய ஒரே கடையில வேலைக்கு வைக்க கூடாதுனு சொல்றது, அவனை ஏதாச்சும் சொன்ன நீ பாஞ்சிட்டு வந்துடுற, நீ உன் வேலைய மட்டும் பாரு என சொல்லிட்டு, புத்தி கெட்ட பையன் ஒரு விவரமும் தெரியலையே டா. உனக்கு உன் அண்ணன் மகனை பார்க்கணும்னா நீ உன் அண்ணண் கிட்ட போய் கேட்க வேண்டியது தானே? அதை ஏண்டா என் மகள் கிட்ட வந்து கேட்குற? அவ உன்கிட்ட குழந்தையை காட்டுனதுக்கு வீட்ல போற வரவங்க கிட்டயெல்லாம் திட்டு வாங்கிட்டு இருக்கணுமா? ஓடி போனா அப்படியே கண் காணாத இடத்துக்கு போய் தொலைய வேண்டியது தானே, உனக்கு வேலை வாங்கி கொடுத்து தங்க இடம் பார்த்து கொடுத்து மூர்த்தி புள்ளையை தூக்கிட்டு வந்து காட்டிட்டு என் பொண்ணு திட்டும் வாங்கணுமா? என திட்டுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.