தனத்தின் அம்மாவால் வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது.
Pandian Stores Episode Update 08.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். கண்ணன் கேட்டதற்காக மீனா தனது பிள்ளையை தூக்கி கொண்டு வீட்டை தாண்டி அந்தப் பக்கம் கூட்டிப்போய் காண்பித்தார். அண்ணியின் குழந்தையை பார்த்த கண்ணன் கண்ணீர் விட்டு அவனை தூக்கி கொஞ்சினான். கண்ணனும் ஐஸ்வர்யாவும் மாறி மாறி குழந்தையை கொஞ்சியது மட்டுமல்லாமல் குழந்தையை வைத்துக்கொண்டு செல்பி புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.
அதற்குள் வீட்டில் அனைவரும் மீனாவும் குழந்தையும் காணவில்லை எனத் தேடி ஒன்று சேர்ந்து விட்டனர். பின்னர் கண்ணனிடம் குழந்தையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த மீனா அனைவரும் ஒன்றாக கூடி நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தனம் எங்க போயிட்ட மீனா என கேட்டார். குழந்தையை வச்சிக்கிட்டு வெளியில தான் இருந்தேன் என கூறினார். அவன் அழ ஆரம்பிச்சிட்டா அதான் அப்படியே தெருவுல கொஞ்ச நேரம் நடந்தேன் என கூறினார் மீனா.
தனத்தின் அம்மா குழந்தையை வெடுக்கென வாங்கிக் கொண்டு குழந்தையை வெளியே கூட்டிட்டு போனியா? இதுவே உன் புள்ளையா இருந்தா தூக்கிட்டு போய் இருப்பியா.? கொஞ்சம் கூட அறிவு வேணாமா? என திட்டினார். மீனா இல்ல பெரியம்மா எனக்கு தெரியாது என சொல்லி ஒரு புள்ள பெத்துட்ட இன்னும் உனக்கு தெரியாதா? என மோசமாக பேச மீனா அழுதுகொண்டே உள்ளே சென்று விட்டார். தனமும் மூர்த்தியும் தனத்தின் அம்மாவை அமைதியாக இருக்க சொல்ல அவர் என்னையே குத்தம் சொல்லுங்கள் என கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.
வெள்ளி, செவ்வாய் ஜோதி வழிபாடு ஏன்?
இங்கு மீனாவின் அப்பா அம்மா ரூமிற்குள் வந்து மீனாவை இன்னும் உசுப்பேத்தி விடுகின்றனர். இப்பவே கயலை தூக்கிக் கொண்டு எங்க கூட வந்துடு. மாப்பிள்ளை வந்தா வரட்டும் வரலைனா போகட்டும் என அவருடைய அப்பா கூறுகிறார். இந்த நேரத்தில் ஜீவா உள்ளே வந்து நடந்ததுக்கு மன்னிப்பு கேட்கிறார். அண்ணாவும் அண்ணியும் அத்தையை திட்டிட்டு தான் இருந்தார்கள் என சொல்கிறார். என்ன பெருசா திட்டிட்டாங்க. உங்கள கட்டிக்கிட்டு ஒரு நாள் கூட சந்தோசமா இல்ல என மீனாவின் அப்பா ஜீவாவிடம் சத்தமிட்டார்.
பிறகு மீனா அம்மா இப்படி எல்லார்கிட்டயும் திட்டு வாங்க தான் எங்க பொண்ணை பெத்து உங்க கிட்ட அனுப்பி வைத்திருக்கோம் என்று கூற மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்தப் பக்கம் தனம் தன்னுடைய அம்மாவை நீ என்கிட்ட சொல்லு, மீனாவை திட்ட உரிமை இல்லை என கூறினார். இந்த குழந்தை மேல உனக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கோ அதே உரிமை மீனாவுக்கும் இருக்கு என பேசினார்.
ரெண்டு பேரோட Combo செம – Enemy Day 4 Common Audience Review
பிறகு அவருடைய அம்மா அழுதுகொண்டே வெளியே சென்றுவிட தன்னுடைய அண்ணன் அண்ணியிடம் அம்மாவை இங்கிருந்து கூட்டிட்டு போங்க. அவங்க தேவையில்லாம வார்த்தையை விட்டு காயப்படுத்திடுறாங்க என சொல்ல கஸ்தூரி உடனே எங்களுக்கு எவ்வளவு பட்டாலும் நாங்க திரும்ப மாட்டோம். உனக்கு பிரசவம் பாக்குற வரைக்கும் உங்க அம்மா வேணும் இப்ப வேணாமா என கூறுகிறார்.
ஜீவா இதையெல்லாம் கேட்டுவிட்டு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். மீனாவிடம் பேச முயற்சி செய்தும் மீனா பேச விருப்பம் இல்லாமல் வெளியே சென்றுவிட்டார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட்.