முன்னாள் அதிமுக அமைச்சர் பா வளர்மதிக்கும் கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Pa.Valarmathi Tested Corona Positive : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
சென்னையில் மட்டுமே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏற்கனவே உயர்கல்வித் துறை அமைச்சர் கே பி அன்பழகன், ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ ராஜா மற்றும் இரண்டு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களைத் தொடர்ந்து தற்போது முன்னாள் அதிமுக அமைச்சரான பா வளர்மதிக்கு கொரானா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதே போல் எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.