நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தினை வம்சி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ரஞ்சிதமே என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது தமன் இசையில் உருவாகியுள்ள இப்பாடலில் உள்ள சில வரிகளுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது ரஞ்சிதமே பாடலில் இடம்பெற்ற ‘உச்சி கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே’ என்ற வரிகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது! இப்பாடலில் உள்ள உண்மையான அர்த்தம் புரியாமலேயே பல சிறுவர்கள் பாடி வருவதால் விஜய் போன்ற பிரபல நடிகர்கள் சமூக பொறுப்பை கடைபிடிக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.