robbers
தேனி மாவட்டத்தில் நள்ளிரவில் நடமாடும் வடமாநில கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

North indian Robbers in theni district shocking pic – தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டியில் வசிப்பவர்கள் ராமையா, அழகர் ராஜா மற்றும் விஜயா. இவர்களுக்கு சொந்தமாக அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் 5 வீடுகள் இருக்கின்றன.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வட மாநில கொள்ளையர்கள் அந்த வீடுகளுக்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த நாய்கள் குறைத்ததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

தர்ஷன் விசயத்தில் ஏமாற்று வேலை செய்த டிவி சேனல்..? ரசிகரின் டீவீட்டால் சர்ச்சை.!

உத்தமபாளையம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா ஆய்வுகளை பரிசோதித்த போது கொள்ளையர்களின் உருவம் தெளிவாக தெரிந்தது. எனவே, வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த வடமாநில கொள்ளையர்கள் சட்டை அணியாமல், டவுசர் போன்ற உள்ளாடை மட்டும் அணிந்திருந்தனர். அவர்கள் யார்? அப்பகுதிக்கு எப்படி வந்தனர் என்பது பற்றி விசாரித்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான செய்தி நாளேடுகளிலும் வெளியாகியுள்ளது.