Nenjam Marappathillai : நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து அமித் பார்கவ் விலக இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன என்பவும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று நெஞ்சம் மறப்பதில்லை.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் இருந்து நிஷா வெளியேறியதை தொடர்ந்து தற்போது அமித் பார்கவ்வும் வெளியேற உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
[ இதையும் படிங்க : தலைவர் 166 படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் – கசிந்தது அதிரடி தகவல்.! ]
இதற்கான காரணம் என்ன என்று விசாரித்த போது தன்னுடைய வாழ்க்கையில் சீரியல்களை தாண்டி அடுத்த கட்டத்திற்கு பயணிக்க வேண்டும் என்பதால் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நிஷா தன்னுடைய கதாபாத்திரம் முற்றிலும் நெகடிவ்வாக இருப்பதால் விலகி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
[ இதையும் படிங்க : புக்கிங்கில் புது சாதனை படைத்த தல அஜித் – கோலிவுட்டை அதிர வைத்த சாதனை.! ]