ஜெயிலர் படம் வெற்றியால் நெல்சன் சம்பளம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இன்னும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்காக நெல்சன் திலீப் குமார் ரூபாய் 22 கோடி சம்பளம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஜெயிலர் கொடுத்து வெற்றியால் நெல்சன் அடுத்த படத்திற்கான சம்பளம் அதிரடியாக உயர்ந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள அடுத்த ஒரு படத்தையும் நெல்சன் இயக்க இருப்பதாகவும் அந்த படத்திற்காக ரூபாய் 55 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன் வந்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.