கீழே விழுந்த பவுன்சரை பார்த்து பதறிப்போன நயன்தாராவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nayanthara was shocked about bouncer:

பிரபல காதல் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்கள் கடந்த ஜூன் 9ஆம் தேதியில் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த நிலையில் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பி வந்த இவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போவதாக முன்பே சொல்லியிருந்தனர்.

அதன்படி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்கள் அனைவருக்கும் தனது  நன்றிகளை கூறி விட்டு சிறிது நேரம் பேட்டியளித்தனர். அதன்பின் பிரஸ்மீட் முடிந்து நடந்து செல்லும்போது பவுன்சர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை சுற்றி பாதுகாப்பாக அழைத்து வந்தார்கள்.

அப்போது கூட்ட நெரிசலில் நயன்தாராவின் பக்கத்திலிருந்த பவுன்சர் ஒருவர் கீழே விழுந்துவிட்டார். அதைப்பார்த்து நயன்தாரா அதிர்ச்சியில் பதறிப்போன காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

YouTube video