திருமணத்துக்குப் பிறகு அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் நடிகை நயன்தாரா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. அஜித் விஜய் ரஜினி சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான ஆறு மாதங்களில் இருவரும் இரட்டை குழந்தை பெற்று இருப்பதாக அறிவித்தது ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியது. பிறகு நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட விஷயம் தெரிய வந்தது.
இப்படியான நிலையில் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
காரணம் அந்த போட்டோவில் உடல் மெலிந்து வயதான தோற்றத்தில் இருப்பது போல தெரிவதுதான். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி மாறிட்டார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.