நாடோடிகள் 2 படத்திற்கான டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் நாடோடிகள். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இந்த படத்தையும் சமுத்திரக்கனி இயக்க சசிகுமார், பரணி, அஞ்சலி, அதுல்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் டீஸர், ட்ரைலர், ஸ்னீக் பீக் வீடியோ ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்து வருகிறது.
இதனால் நேற்று தொடங்கிய இந்த படத்தின் டிக்கெட் புக்கிங்கும் பல தியேட்டரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாடோடிகளை போலவே நாடோடிகள் 2 திரைப்படமும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை ( ஜனவரி 31 ) முதல் இப்படம் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.