விஜய்க்கான கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். 

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியவர் ஏ. ஆர் முருகதாஸ். 

இவர் த‌ளபதி விஜயை வைத்து படத்தை இயக்க இருந்த நிலையில் கதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். 

இதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது முருகதாஸ் இந்த படம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். 

அதாவது விஜய்க்கு எழுதிய கதையில் சில திருத்தங்களை செய்து தான் சிவகார்த்திகேயனுக்கு கூறினேன். அந்த கதை பிடித்து போகவே நடிக்க ஒப்பு கொண்டார், மேலும் படத்தை தயாரிக்கவும் உள்ளார் என கூறியுள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.