சூழ்ச்சியில் சிக்கிய நந்தினி, தப்பிக்கப் போவது எப்படி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது..

நேற்றைய எபிசோடில் நந்தினி ரேணுகாவிடம் எந்த ஸ்கூல் பார்த்து இருக்கீங்க எவ்வளவு பீஸ் கேட்டு இருக்காங்க என்று கேட்க ரெண்டு மூணு ஸ்கூல் பார்த்திருக்கேன் இன்னும் முடிவு பண்ணல என்று நந்தினி சொல்லுகிறார். மறுபக்கம் அம்மாச்சி அனைவருக்கும் சாப்பாடு பரிமாற இந்த நெய் சோறு மட்டும் செம டேஸ்டா இருக்கு அம்மாச்சி என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினியின் மாமா இரண்டு தர்பூசணி பழத்தை எடுத்துக்கொண்டு வர மோப்பம் பிடித்துக் கொண்டே வந்து சாப்பாடு போட சொல்லி உட்கார போய் கை கால் கழுவிட்டு வா என்று சொல்ல அதெல்லாம் நான் பண்ணவே மாட்டேன் நீ சாப்பாடு எடுத்து போடு என்று சொல்லுகிறார். நந்தினியின் மாமா ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கிறார் ரஞ்சிதா ஒரு ஆள் மட்டும் மிஸ்ஸிங் அக்காவுக்கு நெய் சோறு என்றால் ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல அதற்கு நந்தினியின் மாமா வர சொல்ல வேண்டியது தானே என்று கேட்கிறார். உடனே அம்மாச்சி கட்டிக் கொடுத்த பொண்ணு சும்மா சும்மா கூப்பிடக்கூடாது என்று சொல்ல, நீ கட்டி குடுத்தியா நீ கட்டி குடுத்தியா சொல்லு சொல்லு என்று கேட்டு மண்டபத்துல என்ன நடந்துச்சுன்னா நேர்ல பார்த்தேன் அமைதியா இரு என்று சொல்லுகிறார். எடுத்துக்கிட்டு போய் கொடுக்க வேண்டியதுதானே என்று சொல்லுகிறார்.
புனிதா இதுவும் நல்ல ஐடியா தானே என்று சொல்லி நானே எடுத்துட்டு போறேன் என புனிதா சொல்லுகிறார். சிங்காரம் போறதுக்கு முன்னாடி ஒரு போன் பண்ணிட்டு போமா என்று சொல்ல இல்ல அப்பதான் சர்ப்ரைஸா இருக்கும் நான் சொல்லாமல் தான் போக போறேன்னு என்று சொல்ல அம்மாச்சியும் சாப்பாடு கொடுத்து விட புனிதாவும் சுந்தரவல்லி வீட்டுக்கு வருகிறார். இதனை கவனித்து சுந்தரவள்ளியும் அருணாச்சலமும் வெளியில் வருகின்றனர். வந்தவுடன் சுந்தரவல்லி எதுக்கு வந்த என்று கேட்க, அருணாச்சலம் சொல்லாம கூட வந்திருக்க என்னம்மா விஷயம் என்று சொல்ல ஆமா சொல்லிட்டு வருவதற்கு விஐபி என்று கேட்கிறார். உடனே அருணாச்சலத்தை சுந்தரவல்லி திட்டிக் கொண்டிருக்க நந்தினி ஓடிவந்து புனிதா நீ எப்ப வந்த உள்ள வா என்று கூப்பிட அவள எதுக்கு உள்ள கூப்பிடுற என்று சுந்தரவல்லி கேட்கிறார். குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட, அருணாச்சலம் என்ன பேசிக்கிட்டு இருக்க நீ வீட்டுக்கு வந்தவங்கள இப்படித்தான் வாசலை நிறுத்தி பேசுவியா என்று கேட்கிறார். உடனே நந்தினி என்ன விஷயம் என்று முதலில் கேட்கலாம் என்று சொல்லுகிறார்.
உடனே புனிதா என்னை எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க நான் என்ன பண்ண என்று கேட்க, சுந்தரவல்லி என்ன பேசுறான்னு பார்த்திங்கள்ல என்று கேட்க நந்தினி ஓட தங்கச்சி பேசினதையும் பார்த்த உன் பொண்ணு பேசினதையும் பார்த்தேன் என்று சொல்ல மாதவி சப்போர்ட் பண்ணி வர, அருணாச்சலம் மாதவி வாயை அடக்கிறார். இப்ப என்ன பண்ணனும்னு சொல்றீங்க இந்த மூஞ்சிய வெத்தல பாக்கு வச்சு உள்ள அழைக்கணும் சொல்றீங்களா என்று கேட்க அவங்களோட குணத்துக்கு மரியாதை கொடுத்து பழகு என்று சொல்ல, நந்தினி எங்களால எந்த பிரச்சனையும் வேண்டாம் ஐயா என்று சொல்ல புனிதா எதுக்கு வந்த என்று கேட்க அம்மாச்சி நெய் சோறு செஞ்சது உனக்கு பிடிக்குமே எடுத்துட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். இவ பெரிய கலெக்டர் இவளுக்கு விதவிதமா சாப்பாடு வருது என்று சுந்தரவள்ளி சொல்லுகிறார். என் அக்காவுக்கு பிடிக்கும்னு நான் தான் எடுத்துட்டு வந்தேன் என்று சொல்ல, சுந்தரவல்லி சாப்பாட்டை புடுங்கிவிசிறி அடிக்கிறார். சுந்தரவல்லி சாப்பாட்டை விசிறி அடித்தவுடன் புனிதா கோபப்பட்டு நீங்களும் ஒரு பொண்ணு தானே வீட்டுக்குள்ள பணத்தை நிரப்பி வச்சிருந்தா சாப்பாட்டுக்கு இது மாதிரி மரியாதை கொடுக்காமல் இருப்பீர்களா நீங்களும் பொண்ண வச்சிருக்கீங்களா அவங்கள தனியா அனுப்ப வேண்டியது தானே எதுக்கு வீட்டிலேயே வச்சிருக்கீங்க என்று சுந்தரவல்லியை எதிர்த்து புனிதா பேசுகிறார்.
ஆனால் நந்தினி மன்னிச்சிடுங்க இங்க பக்கத்துல இருக்கறதுனால அம்மாச்சி கொடுத்து விட்டுட்டாங்க என்று சொல்லுகிறார்.அந்த நேரம் பார்த்து சூர்யா வர என்ன டார்லிங் வெளியே நின்னுட்டு இருக்க என்று நந்தினியை பார்த்து கேட்க உடனே பக்கத்தில் இருப்பது யார் என பார்த்து புனிதா வா இவள கூப்பிட தான் வெளியே வந்தியா என்று கேட்கிறார் உடனே சூர்யா வா புனிதா உள்ளே போகலாம் என்று கூப்பிட இல்ல சார் நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்ல ஓ அப்போ ரொம்ப நேரம் முன்னாடியே வந்துட்டியா உன்னை வழி அனுப்ப தான் இவங்க எல்லாம் வந்திருக்காங்களா என்று கேட்கிறார் அந்த மரியாதை எல்லாம் இந்த வீட்ல கிடைக்குமா என்று அருணாச்சலம் சொல்ல என் மச்சினிச்சிக்கு மரியாதை இல்லையா என்று சூர்யா கேட்கிறார்.
உடனே புனிதா இங்க பாருங்க சார் என்று சாப்பாடு கொட்டியதை காட்ட இது அம்மாச்சி சமைச்சு சாப்பாடு தானே இது ஏன் கீழே போட்டு இருக்கு நீ விழுந்துட்டியா நந்தினி என்று சொல்ல இது தகுதி இல்லாத சாப்பாடா சூர்யா என்று சொல்ல யார் சொன்னது என்று கேட்க யார் சொல்லுவாங்க என்று சொல்லியவுடன் சுந்தரவல்லி என புரிந்து கொண்ட சூர்யா கல்யாணத்தை கூப்பிட்டு,நான் சாப்பிடற தட்டை எடுத்துக்கிட்டு வா என்று சொல்லுகிறார். உடனே சாப்பாடு பக்கத்தில் உட்கார்ந்த சூர்யா, தட்டு மற்றும் சாப்பாட்டை பார்த்துவிட்டு தட்டை தூக்கி வீசிவிட்டு தரையில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிடுகிறார்.
மாதவி இவன் என்னமா பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கேட்க சுரேகா அம்மாவா அசிங்கப்படுத்துவதற்கு இப்படி பண்றான் என சொல்ல நந்தினியும் அருணாச்சலமும் வேண்டாம் என சொல்ல சூர்யா ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். இது மாதிரி ஒரு சாப்பாடு நான் சாப்பிட்டதே கிடையாது, அம்மாச்சி அம்மாச்சி தான் செம டேஸ்டா இருக்கு நீயும் ஒரு வாய் சாப்பிடுவா என்று கூப்பிட, நந்தினி வராமல் இருக்க சரி நானே சாப்பிடுகிறேன் என சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்து சூப்பரா இருக்கு டாடி இது மாதிரி ஒரு சாப்பாடு நான் சாப்பிட்டதே இல்லை என்று சொல்ல, சுந்தரவல்லி மற்றும் மீதி பேர் அனைவரும் கோபமாக உள்ளே சென்றுவிட அருணாச்சலம் அவரை அங்கிருந்த வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விடுகிறார். அதுக்கு தான் இங்க வர வேண்டான்னு சொன்ன என்று சொல்ல அதற்கு, புனிதா நீ எப்படி அக்கா இங்க இருக்க என்று கேட்க இங்கு நடந்ததெல்லாம் வீட்ல இருக்குறவங்களுக்கு தெரிய வேணாம் நீ வா என்று அழைத்துச் செல்கிறார். உடனே அருணாச்சலம் ரூமுக்கு வந்தவுடன் சுந்தரவல்லி வழக்கம் போல் அருணாச்சலத்திடம் கோபமாக பேசுகிறார்.
அவங்க ஊர்ல இருக்கிறப்போ இப்பவும் ஒரு ரூபா கூட நம்ம கிட்ட இருந்து வாங்கல சுயமரியாதையோட தான் இருக்காங்க என்று சொல்லுகிறார். என்னோட கோபம் என்னோட ஆத்திரமும் இதை காட்ட கூட எனக்கு உரிமை இல்லையா உங்க பையன் பண்ற நாடகம் அந்த குடும்பம் பண்ற நாடகம் எல்லாம் உங்களுக்கு தெரியலையா அவங்க என்ன நாடகம் பண்றாங்கன்னு சொல்லிட்டு இருக்க, அவ போறன்னு சொல்றா ஆனா போக மாட்டேங்குற அது தெரியலையா உங்களுக்கு என்று சொல்ல அவ போனா சூர்யாவும் பின்னாடியே போயிடுவான் பரவால்லையா என்று கேட்கிறார். நீ நடந்துக்கிட்டது தப்பு சுந்தர வள்ளி என்று சொல்ல, அதான் உங்க பையன வச்சு பழி வாங்கிட்டீங்களா போங்க என்று சொல்ல அப்போ உனக்கே தெரியுது தானே என்று சொல்ல கீழே கொட்டினால் சாப்பாட்ட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கான் அது அசிங்கமா தெரியலையா உங்களுக்கு என்று கேட்க, அதுக்கு நீதான காரணம் என்று சொல்லுகிறார். அவ அமைதியா சாப்பாடு குடுத்துட்டு போயிருந்தா இந்த பிரச்சனையே இல்ல, அவங்க ஏதோ பொண்ணுக்கு பிடிச்சது செஞ்சு கொடுத்திருக்காங்க நீ கூட தான் இவ்வளவு நாள் இருக்க இதுவரைக்கும் உன் பொண்ணுங்க உனக்கு ஏதாவது செஞ்சு கொடுத்திருப்பார்களா இல்ல நீ தான் அவர்களுக்கு செஞ்சு கொடுத்து இருப்பியா அவங்க பாசத்துல விளையாடாத புரிஞ்சுக்கோ என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி இந்த வீட்ல எனக்கு தெரியாம ஏதோ ஒரு சூழ்ச்சி நடக்குது என்று நினைக்கிறார். மறுபக்கம் அருணாச்சலம் செக் ஒன்று கொடுத்து அதில் சூர்யாவின் கையெழுத்து வாங்குமாறு நந்தினி இடம் கொடுத்து அனுப்ப சூர்யாவும் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறார் அதனை டைனிங் டேபிளில் வைக்க ரேணுகா அதை கிழித்து எடுத்துக் கொள்கிறார். எனக்கு நம்பிக்கையா இருக்குற சூர்யா சாரையும் பெரிய ஐயாவையும் எனக்கு இதுல யாரோ திரும்ப பாக்குறாங்க என்று நினைக்க மறுப்பக்கம் அர்ச்சனா அந்த செக்கை கையில் வைத்துக்கொண்டு அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க என்று டயலாக் பேசுகிறார்.
இந்த சூழ்ச்சியில் இருந்து நந்தினி தப்பிக்கப் போவது எப்படி? என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
