ஜோதிகாவின் பேச்சு குறித்து திரௌபதி இயக்குனர் மோகன் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.
Mohan G Comments on Jyothika Speech : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஜோதிகா.
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா தற்போது தன்னுடைய அடுத்த இன்னிங்சில் கலக்கி வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான ராட்சசி படத்திற்காக விருது வாங்கிய போது அந்த விருது விழாவில் தஞ்சை பெரிய கோவிலுக்கு எதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா?
இதே அளவு பணத்தில் மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் கட்ட உதவுங்கள் என பேசி இருந்தார். ஜோதிகா கூறியது நல்ல விதத்தில் இருந்தாலும் அது வேறு விதமான சர்ச்சைகளை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.
பலரும் இது குறித்து கருத்து கூறி வரும் நிலையில் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி அமைதி காப்பது வருத்தமளிப்பதாக ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து மோகன்ஜி ஜோதிகாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, அருள்மொழி வர்மன் ஒரு அதிசய பிறவி.. மாமன்னன்.. ராஜராஜ சோழன்.. அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள்.. யார் நினைத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரின் புகழை, இவர் வழிபட்ட ஈசனை, இவர் உருவாக்கிய இந்த அதிசயத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.. இவரை தொட்டால் கெடுவார்கள் என கூறியுள்ளார்.
அருள்மொழி வர்மன் ஒரு அதிசய பிறவி.. மாமன்னன்.. ராஜராஜ சோழன்.. அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள்.. யார் நினைத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரின் புகழை, இவர் வழிபட்ட ஈசனை, இவர் உருவாக்கிய இந்த அதிசயத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.. இவரை தொட்டால் கெடுவார்கள்.. https://t.co/EdTWNLmLuI pic.twitter.com/9CBPYtVDk9
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 22, 2020