கொரானா வைரஸ் அதிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழ்நாட்டு பின்பற்றும் தாரக மந்திரம் என்ன என்பது பற்றி அமைச்சர் பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார்.
Minister K Pandiarajan Tweet About Corona Treatment : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கும் இல்லாத அளவில் வெகு விரைவாக அதிலிருந்து மீண்டு வருகின்றனர். அதற்கு காரணம் தமிழக அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் தரமான தீவிர சிகிச்சை தான் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தமிழக கலாச்சாரத் துறை அமைச்சர் பாண்டியராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தின் கொரானா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க நாம் பின்பற்றப்படும் தாரக மந்திரம் 6T தான் என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது Tracing, Tracking, Testing, Treating, Tech & Teamwork என்பதே அவர் குறிப்பிட்டுள்ள 6T என்பதன் பொருள்.
பெல்ஜியம், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இங்கு கொரோனா தொற்று நோயால் உயிர்கள் இழக்கப்படுவது என்பது குறைவாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.