இன்னொரு போட்டியாளர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர் மாயா, பூர்ணிமா மற்றும் ஆயிஷா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மாயா, பூர்ணிமா, ஆயிஷா மற்றும் ஜோவிகா ஆகியோர் சேர்ந்து பிரதீப் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வெளியேற்ற செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர் மீது குற்றச்சாட்டை வைத்து தொடங்கியுள்ளனர். அந்தப் போட்டியாளர் ஆர். ஜே பிராவோ தான்.
மாயா பிராவோவின் பார்வையே சரியில்லை தப்பான இடத்தில் பார்த்து பேசுகிறார் முகத்தை பார்த்து பேசுவதில்லை என குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அதன் பிறகு பூர்ணிமா அந்த ஆளு உங்க பின்னாடி அப்படி பாத்துகிட்டு இருந்தாரு என கூறியுள்ளார். இதனால் கமல்ஹாசன் இவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.