மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க போவது யார் என்ற பேச்சுகள் அடிப்பட தொடங்கியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு சபரி மலை யாத்திரைக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.
தற்போது அவர் சபரிமலை சென்றும் வந்து விட்டார், ஆனால் இன்னும் படம் தொடங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க கன்னட நடிகர் சுதீப்பிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால் இது உண்மையா? இல்லையா? என படக்குழு அறிவித்தால் தான் தெரிய வரும்.