சிம்புவின் நடிப்பில் உருவாக இருந்த மாநாடு படப்பிடிப்பு மீண்டும் தள்ளி போயுள்ளது, இதற்கான காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ள இந்த படம் கடந்த வருடம் ஆர்மபத்திலேயே தொடங்கி இருக்க வேண்டியது.
சிம்புவால் எழுந்த சர்ச்சைகளால் ஒரு வருடம் தள்ளி போய் விட்டது, அதன் பின்னர் நடந்த பஞ்சாயத்துக்கு பிறகு மீண்டும் தொடங்கும் என அறிவுக்கப்பட்டது. அதற்கான வேலைகளும் தொடங்கி விட்டது.
மேலும் படப்பிடிப்புகள் வரும் ஜனவரி 26-ல் தொடங்கும் என அறிவித்திருந்தனர். ஜனவரி 26 போய் 27-ம் வந்து விட்டது, ஆனால் படப்பிடிப்பு தொடங்கவில்லை.
இது குறித்து படக்குழுவினர் தரப்பில் கேட்ட போது அவர்கள் பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்த நாள் என்பதால் அதனை பிரம்மாண்டமாக கொண்டாடி விட்டு படத்தை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.