அஜித்துடன் படம் பண்ண ஆசை.. லோகேஷ் கனகராஜ்.!

அஜித்துடன் படம் பண்ண ஆசை என பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் லோகேஷ் இடம் அடுத்து அஜித்தை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த லோகேஷ் எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது கண்டிப்பாக பணம் பண்ணுவேன் அவருடன் படம் பண்ண வேண்டும் என்பது என ஆசை உள்ளது என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
