தளபதி விஜய் உட்பட பொன்னியின் செல்வன் படத்தை நிராகரித்த பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். நடிகர் கார்த்தி விக்ரம் ஜெயம் ரவி ஐஸ்வர்யா ராய் திரிஷா உட்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் சரத்குமார், பிரபு பிரகாஷ்ராஜ், லட்சுமி மஞ்சு, விக்ரம் பிரபு, ஜெயராம் என இந்த படத்தில் நடித்துள்ளவர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கால் சிப் பிரச்சனை காரணமாக நடிக்க மறுத்த நடிகர்கள் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
படத்தில் வந்தியதேவனாக நடித்த தளபதி விஜய்க்கு வாய்ப்புகள் அமைந்தும் படப்பிடிப்பு லேட்டான காரணத்தினால் அவர் இந்த படத்தை நிராகரித்துள்ளார்.
நடிகர் சூர்யா அவர்களும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நிலையில் அவரும் டேட் இல்லாத காரணத்தினால் நடிக்க முடியாமல் போய் உள்ளது.
விஜய் சேதுபதி அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்து படப்பிடிப்பு தள்ளி போய் கொண்டே இருந்த காரணத்தினால் டேட் இல்லாமல் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்து படப்பிடிப்புகள் தொடங்க லேட்டான காரணத்தினால் முடிக்காமல் விலகிக் கொண்டார்.
அனுஷ்கா, அமலா பால் என இருவரும் இந்த படத்தில் நடித்த ஒப்பந்தமான நிலையில் சில காரணங்களால் நடிக்க முடியாமல் விலகிக் கொண்டனர். இப்படியாக மொத்தம் ஒன்பது திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் படப்பிடிப்புகள் தந்து போன காரணத்தினால் நடிக்க முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.