Latest Update on Maanaadu Shooting
Latest Update on Maanaadu Shooting

மாநாடு சூட்டிங் எப்போது தொடங்கும் என அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

Latest Update on Maanaadu Shooting : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வலம் வருபவர்களில் ஒருவர் சிம்பு. கடந்த சில வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, மனோஜ் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி ஊரடங்கால் பாதியிலேயே நின்று போய் உள்ளது.

ஏற்கனவே பல முறை நின்று போன இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குமா? தொடங்காதா? எப்போது தொடங்கும் என ரசிகர்கள் தொடர்ந்து தயாரிப்பாளரை கேட்டு வருகின்றனர்.

மாநாடு தயாரிப்பாளரை மிரள வைத்த சிம்பு ரசிகர்கள்.. வெளியாகிறது மாநாடு மோஷன் போஸ்டர் – ஆனால்?

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டர் பதிவு மூலம் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது வெள்ளித்திரை படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று தமிழக அரசு கிரீன் சிக்னல் காண்பித்தால் போதும் உடனே மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி பலர் தொடர்ந்து தன்னை கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்

https://twitter.com/STRPullingo/status/1284892202984853504?s=19