நடிகர் பிரஜன் சோசியல் மீடியா லைவில் இனி சீரியலில் நடிக்க மாட்டேன் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன் என்ற அதிரடியான பதிலை கொடுத்துள்ளார். இது குறித்த தகவல் வருவதாக வருகிறது.

சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் பிரஜன் சினிமாவில் ஆர்வம் கொண்டவர் என்பதால் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அவருக்கு எந்த படங்களும் சரியான வெற்றியை தராததால் வருத்தமடைந்த நடிகர் பிரஜன் சின்ன திரையில் சின்ன தம்பி, அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தாள் போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மதில் பிரபலமானார்.

ஆனால் அந்த சீரியல்கள் அனைத்தும் விரைவிலேயே சில காரணங்களால் முடித்து வைக்கப்பட்டன. அதனால் கடுப்பான பிரஜன் மீண்டும் சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது அவர் கைவசம் 7 படங்கள் உள்ளன. இதன் காரணமாக தான் ‘இனி சீரியலில் நடிக்க மாட்டேன் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன்’ என சோஷியல் மீடியாவில் லைவ் வந்த பிரஜின் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

தற்போது பிரஜினின் ‘டி3’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் அவரின் அடுத்தடுத்த படங்களில் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.