நடிகை அதிதி ஷங்கர் இணைந்து இருக்கும் இரண்டு படங்களுக்கும் புதுவித பிரச்சனைகள் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை வியக்க வைத்து முன்னணி இயக்குனராக திகழ்பவர் தான் இயக்குனர் ஷங்கர். அவரது மகள் தான் அதிதி ஷங்கர். இவர் தற்போது கார்த்தியின் “விருமன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதிதி தனது முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல ரசிகர்களை தனது க்யூட்டான பேச்சு மற்றும் நடவடிக்கையால் கவர்ந்திருக்கிறார்.

இப்படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் நடிகை அதிதி இரண்டாவது படமாக சிவகார்த்திகேயனின் “மாவீரன்” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடித்திருக்கும் முதல் படமான விரும்பும் திரைப்படம் நாளை திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் இவரது இரண்டு படங்களும் தற்போது புதுவிதமான பிரச்சனைகளை சந்தித்துள்ளது.

அதாவது இவர் தற்போது நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் நிதி பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் நடிகை அதிதியின் முதல் படமான விருமன் திரைப்படத்திற்கும் கதை திருட்டு பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.

அதனால் இந்த திரைப்படம் குறிப்பிட்டபடி நாளை திரையரங்கில் வெளியாகுமா என்ற சந்தேகம் தற்போது உலாவி வருகிறது. இப்படி நடிகை அதிதி ஷங்கர் இணைந்திருக்கும் இரண்டு படங்களும் புதுவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அவரது ரசிகர்கள் அதிதி ஷங்கர் சம்பந்தப்பட்ட இரண்டு திரைப்படங்களும் இப்படி ஆகிவிட்டதே, என்று வருத்தத்தோடு கருத்து தெரிவித்து வருகின்றனர்.