பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகி கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்தினம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, திரிஷா என பல நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
படத்தின் ஷூட்டிங்கிற்காக லொகேஷன்களை தேடி வந்த மணிரத்தினம் தாய்லாந்து பகுதியை தேர்வு செய்திருந்தார். இதனையடுத்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்த்த்தில் தொடங்கியுள்ளன.
மேலும் இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் கார்த்தியும் ஜெயம் ரவியும் இணைந்து நடித்து வருகின்றனர். விக்ரம் சீயான் 58 படத்தின் ஷூட்டிங்களை முடித்து விட்டு இப்படத்தில் இணைய உள்ளார்.
மேலும் இப்படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகி கொண்டுள்ளார். அதற்கான காரணம் என்ன என விசாரித்த போது தலைவர் 168 படத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள கால்ஷீட்டால் இந்த படத்தின் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் தலைவர் படத்திற்காக பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகி கொண்டுள்ளார்.