திருமணம் குறித்த வதந்தியால்
வருத்தத்தில் இருப்பதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான தசரா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இது தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் தொடர்பான வதந்திகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. தற்போது இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், என் திருமணத்தில் என்னை விட மற்றவர்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். சோசியல் மீடியாவில் எனக்கு திருமணமே செய்து வைத்துவிடுவார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று புரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. என்று கூறியிருக்கிறார்.