karthi
கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Karthi movie shooting stopped by angry mob – ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சுல்தான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியகா நடிகர் ரராஷ்மிகா மண்டனா நடித்து வருகிறார்.

கமல் படத்திற்கு சிக்கல் தொடங்கியது – பட பிடிப்பு நிறுத்தப்பட வாய்ப்பு .!

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு மலைக்கோட்டையில் நடைபெற்று வந்தது. அப்போது, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஐ சேர்ந்த சிலர் அங்கு வந்து படப்பிடிப்பு குழுவினரை தகாத வார்தைகளில் திட்டினர். மேலும், அங்கிருந்த படப்பிடிப்பு கருவிகளையும் சேதப்படுத்த முயன்றனர். அதற்குள் போலீசார் அங்கு வந்தனர்.

திப்பு சுல்தான் வாழ்க்கையை இப்படத்தில் தவறாக சித்தரிக்கப்படுவதாக கருதி அவர்கள் இந்த செயலை செய்தது பின்னர் தெரிய வந்தது. அதன்பின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படத்தி கதையை முழுதாக கூறினால் மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதிப்போம் என அவர்கள் கூறினர். இந்த சம்பவம் படப்பிடிப்பு குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.