காஞ்சனா படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என பேசியுள்ளார் திருநங்கை பிரியா.
தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் காஞ்சனா. இந்த படத்தில் சரத்குமார் திருநங்கையாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அவரின் மகளாக பிரியா என்ற திருநங்கை நடித்தார். தற்போது இவர் பேட்டி ஒன்றில் இந்த படத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசியுள்ளார்.
காஞ்சனா படத்தில் நடித்ததால் நான் கோடி கோடியாக சம்பாதித்து விட்டதாக நினைக்கிறார்கள். அதன் பிறகு எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை, வேறு வேலையும் கிடைக்கவில்லை என வருத்தப்பட்டுள்ளார். என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இந்த படத்தில் நடித்தது தான் என பிரியா தெரிவித்துள்ளார்.