காஜல் அகர்வால் மீதான மோகத்தால் ரூ 75 லட்சத்தை பறி கொடுத்துள்ளார் பிரபல தொழிலதிபரின் மகன்.
Kajal Aggarwal Controversy Issue : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரின் ஒருவரின் மகன் ஒருவர் நடிகைகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.
இதனை பற்றி தன்னுடைய நண்பர்களிடம் பேச அவர்களில் ஒருவர் ஒரு வழி உள்ளது என கூறி ஒரு இணையதள பக்க முகவரியை கொடுத்து இதன் மூலம் நீ ஆசைப்படும் நடிகைகளை அழைத்து அனுபவிக்கலாம் என கூறி ஆசை காட்டியுள்ளார்.
இதனையடுத்து அந்த தொழிலதிபரின் மகனும் அந்த இணையதளத்தை அணுக அது சில தகவல்களை கேட்டுள்ளது. அதன் பின்னர் ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது.
அதில் உங்களுக்கு பிடித்தமான பெண்ணை தேர்வு செய்யுமாறு கேட்க இவர் காஜல் அகர்வாலை தேர்வு செய்துள்ளார்.
அதன் பின்னர் அந்த நபர் தான் சொல்லும் வங்கி கணக்கில் ரூ 50,000 பணம் போடுமாறு கூறியுள்ளார்.
இவரும் அதன்படியே பணம் டெபாசிட் செய்துள்ளார். அதன் பின்னர் இவருக்கு மொபைலுக்கு காஜலுடன் அரை நிர்வாணமாக இருக்கும் போட்டோ ஒன்று அனுப்பியுள்ளர் அந்த நபர்.
இதனையடுத்து அந்த நபர் தொழிலதிபரின் மகனை மிரட்டி கிட்டத்தட்ட ரூ 75 லட்சம் வரை கறந்துள்ளார். எனவே தொழிலதிபரின் மகன் இரு தினங்களாக காணாமல் போயுள்ளார்.
போலீசில் தீவிர தேடுதலில் ஈடுபட்டு அவரை கண்டு பிடித்து விசாரித்த போது தான் இந்த திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
அதன் பின்னர் பணத்தை ஏமாற்றியவர் யார் என விசாரித்த போது அவர் சரவணன் என்ற தயாரிப்பாளர் ஒருவர் என்பவதும் தெரிய வந்துள்ளது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளார்.
அவர் களவாடிய பணத்தில் இருந்து ரூ 10 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. மீது 65 லட்சத்தை உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் இழந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.