வம்பிழுத்த விஜய் ரசிகர்களுக்கு கைதி பட தயாரிப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷங்கள் என்றாலே திரையுலகில் பெரிய நடிகர்களின் படங்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையான ஒன்று தான்.
இந்த வருட தீபவளுக்கும் அப்படி தான் தளபதி விஜயின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ரிலீசாகின்றன. ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீசானால் அந்த நடிகர்களை எதிரிகள் போல ரசிகர்கள் சித்தரித்து விடுகின்றனர்.
தற்போதும் அப்படி தான் விஜய் ரசிகர்கள் மற்றும் கார்த்தி ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன, இதனால் சில விஜய் ரசிகர்கள் கைதி பட தயாரிப்பாளரிடம் தரக்குறைவாக பேசியுள்ளனர்.
இதனால் கைதி பட தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு தரக்குறைவாக பேசும் முகம் தெரியாத நபர்களை நான் கண்டு கொள்ள போவதில்லை என கூறி ட்வீட் செய்துள்ளார்.
இதோ அவருடைய பதிவு
Fans find their own troll materials to fight! We can’t help. I want all films to do well in the box office. But I don’t give a fuck to the faceless people comes up with their stupid attitude thinking they can make a change with abusive posts!! ????✌????
— S.R.Prabhu (@prabhu_sr) October 20, 2019