ஜெய்லர் திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜெய்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதில் முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலராக நடித்து வருகிறார். பரபரப்பான சண்டை காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவருக்கான படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இப்படத்தின் டப்பிங் மற்றும் ரீ ரிக்கார்டிங் போன்ற தொழில்நுட்ப பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.