ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல், ரசிகர்கள் மகிழ்ச்சி..!
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.
நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தப் படத்தில் சிவராஜ்குமார் ,மோகன்லால் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. வில்லனாக எஸ் ஜே சூர்யாவோ அல்லது செம்பன் வினோத் ஜோஸ் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாகவும் சென்னையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
