IPL 2019 India
IPL 2019 India

IPL 2019 India – ஐபிஎல் 2019 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும் போட்டி 23-ஆம் தேதி மார்ச் மாதம் தொடங்கும் என்றும் நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரித்தால் ஆண்டு தோறும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 11 சீசன் வெற்றிகரமாக முடிவந்த நிலையில் 12-வது சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

ஆனால், இந்த ஆண்டு பொதுதேர்தல் நடைபெற இருப்பதால் தொடர் தெனாப்ரிக்காவிற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கபட்டது.

ஏனெனில், இதே போல் பொது தேர்தலை கருத்தில் கொண்டு 2009-ஆம் ஆண்டு மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் போட்டிகள் தெனாப்ரிக்காவிலும், ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தபட்டன.

இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டும் இந்தியாவில் போட்டிகள் நடைபெறுவதில் சந்தேகம் இருந்தது. இருந்தும் பிசிசிஐ போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த முயற்சி செய்து வந்தது.

இதனை அடுத்து உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாக குழுவின் தலைவர் வினோத் ராய் டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் போட்டிகள் இந்தியாவிலயே நடத்த முடிவு செய்யபட்டு உள்ளது.

இதனை அடுத்து ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் மாதம் 23-ஆம் தேதி தொடங்கும் என்றும் போட்டிகளின் அட்டவணை விரைவில் வெளியிடபடும் என்றும் தெரிவித்து உள்ளது.