Heavy Rain in Kodaikanal
Heavy Rain in Kodaikanal

Heavy Rain in Kodaikanal : கொடைக்கானலில் பருவநிலை காலமான ஜூலை மாதம் சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது மழையின் அளவு வெகுவாக குறைந்ததால் கொடைக்கானலில் உள்ள நீர்த்தேக்கங்கள் வறண்டு போன சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அங்குள்ள மக்களுக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் புதன்கிழமை அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு மேல் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

மக்கள் மழைநீர் சேகரிப்பு பணியில் ஈடுபட வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்.!!

கொடைக்கானலில், சுமார் 5 மணி நேரம் பெய்த பலத்த மழையால் அங்குள்ள ஏரிகள், ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி மக்களின் தண்ணீர் பஞ்சம் கொஞ்சமாவது தீரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.