புதுக்கோட்டையில் ஏழு வயது ஜெயப்பிரியா என்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
Harbhajan Singh Voice on Jayapriya Murder : இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் எந்த தவறும் செய்யாத தந்தை ( ஜெயராஜ் ) மற்றும் மகனை ( பெனிக்ஸ் ) அடித்தே கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்திற்கு நீதி கேட்டு பலரும் போராடி வரும் நிலையில் புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு குளத்தில் வீசப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் பிரதான ஹர்பஜன் சிங் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
அதாவது செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா