சாத்தான் குளத்தில் தந்தை, மகன் என இருவர் போலீஸ் கஸ்டடியில் இருந்த போது மரணமடைந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
GV Prakash Voice on Sathankulam Murder : விசாரணைக் கைதிகளாக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் என இருவரும் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர்களின் இந்த மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும், அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை.
நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுகொள்ளும் என்பதே வரலாறு…
இருவர் மரணத்தை மனித குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.
#JusticeforJayarajAndFenix என பதிவிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.