மணிரத்தினம் படத்தில் நான்கு ஜாம்பவான் நடிகர்கள் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து இவர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில் சிம்பு இணைந்து நடிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டு வந்த நிலையில் பிறகு இது சிம்புவுக்கு இது செட் ஆகாது என முடிவெடுத்தனர்.
இப்படியான நிலையில் மணிரத்தினம் இயக்கும் இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் உடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி ஆகியோரை நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் சிம்புவுக்கு பதிலாக நடிகர் விக்ரமின் நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தவறவிட்ட விக்ரம் இந்த முறை நிச்சயம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.