கதிரை பளார் என அறைந்துள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி நம்ம எல்லாரும் என்ன பண்றோம்னு வேவு பாத்துட்டு தான் இருக்காரு என குணசேகரன் பத்தி சொல்ல ஜனனி அவரை நாம இங்க வர வைக்கணும் என கூறுகிறார்.
அடுத்ததாக எங்களால் தான் போய்விட்டார் என்று சொல்றீங்களா அவரை நாங்களே கூட்டிட்டு வருவோம் என தர்ஷன் குணசேகரனை கூட்டிட்டு வருவது பற்றி சொன்னால் கதிர் அந்த தாடிக்காரன் அப்பனா இருந்தா நல்லா இருக்குன்னு சொன்னேல என்று கேவலப்படுத்தி பேசுகிறார்.
உடனே ஈஸ்வரி அவங்க பேசுவது ஆதங்கம் என சொல்ல கதிர் அசிங்கமாக எதையோ சொல்ல கோபப்பட்ட ஈஸ்வரி பளார் என அறைந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.