திடீர் என்ட்ரி கொடுத்துள்ளார் அப்பத்தா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கோர்ட்டு கூண்டு நேரம் ரேணுகா எங்க கஷ்டத்துக்கு எல்லாம் ஒரு தீர்வு கொடுங்க பேசுவதோடு இந்த ஆளு மட்டும் விட்டுடாதீங்க என்று கொதிக்கிறார்.
அதைத்தொடர்ந்து நந்தினி பிள்ளைகளை குடுக்க மாட்டோம்னு இன்னைக்கு காலையில வரைக்கும் மிரட்டிட்டு இருந்தாங்க என்று உண்மையை உடைக்கிறார்.
அடுத்ததாக ஜனனி அப்பத்தாவை கொன்னுட்டாங்க என்பது குறித்து கண்ணீரோடு பேசுகிறார். இந்த நேரத்தில் அப்பத்தா கோர்ட்டுக்குள் திடீர் என்ட்ரி கொடுக்க அனைவரும் மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் அடைகின்றனர்.