குணசேகரனை அலேக்காக கைது செய்து தூக்கி உள்ளது போலீஸ்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் குணசேகரனின் மாலை மரியாதை உடன் கொண்டாட வீட்டுக்கு வந்த போலிஸ் அவரை கிள்ளிவளவன் வாக்குமூலம் கொடுத்து விட்டதாகவும் தர்ஷினி கடத்தல் கேசிலும் ஆதாரம் கிடைத்து இருப்பதாக சொல்லி கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.
அதைத்தொடர்ந்து சொந்த ரத்தத்தையே கொல்ல பார்த்து இருக்காரு உங்க பையன் இதுக்கு என்ன சொல்ல போறீங்க என்று விசாலாட்சியை பார்த்து ஜனனி கேள்வி கேட்க என் புள்ள அப்படி பண்ணி இருக்க மாட்டான் அவன் கொலை பண்ணது நீங்க கண்ணால பார்த்தியா என்று கோபப்படுகிறார்.
என் புள்ளையை வெளியே எடுக்க யாரும் பார்க்க வேண்டாம் நான் போறேன் என்று விசாலாட்சி கிளம்ப கதிர் யாரும் போக வேண்டாம் என்று ஷாக் கொடுக்கிறார்.