மொத்த குடும்பத்திடம் வசமாக சிக்கி உள்ளார் கதிர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அப்பத்தா குணசேகரனுக்கு பேரதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது இன்றைய எபிசோடில் ஒரு பக்கம் குணசேகரன் தயார் செய்த ரவுடி கதிருக்கு தொடர்ந்து கால் செய்து கொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் காரில் ஞானம், குணசேகரன், ஆடிட்டர் மற்றும் லாயர் ஆகியோர் வந்து கொண்டு இருக்க ஞானம் இப்ப என்னதான் சார் பண்றது என கேட்க லாயர் அவங்க ரெண்டு பேரையும் அவ்வளவு சீக்கிரம் ஒன்னும் பண்ண முடியாது என்று அதிர்ச்சி கொடுக்க குணசேகரன் காரை ஓரமாக நிறுத்த சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து இங்கே சக்தி கதிரின் போனை எடுத்துப் பேச ரவுடி நீங்க சொல்லி தானே ஜீவானந்தத்தின் மனைவியை சுட்டு தள்ளினேன் என்று சொல்ல இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.